ஆபத்துக்காலத்தில் நீ சோர்ந்துபோவாயானால், உன் பெலன் குறுகினது. – நீதிமொழிகள் 24:10

சிந்தனைக்கு
மேலே உள்ள வசனத்தில் மோசமான சூழ்நிலையில் எப்படி இருக்கக் கூடாதென்றும் அதினால் ஏற்படும் எதிர்மறையான விளைவுகளைக் குறித்துக் கூறியுள்ளது. சுயமாக நாம் ஆபத்துக் காலத்த்தை எதிர் கொள்ளும்போது உண்மையில் நாம் சோர்ந்து போகுவோம். இரண்டு எதிர்மறை இருப்பதால் அதை நேர்மறையாக நோக்கும் போது இன்னும் பலன் அதிகம். அதாவது ஆபத்துக் காலத்தில் நாம் மிகவும் சுறுசுறுப்பாய் செயலாற்றும் போது நம்முடைய பெலன் மிகவும் பெருக்கமாகும். ஏனென்றால் நம்மோடு நமதாண்டவர் கூடவே இருக்கிறார். ஆண்டவர் துணையைக் கொண்டு அந்த ஆபத்தில் நம்மை மீட்டெடுக்க விரைந்து வருவார். அதினால் நமது பெலன் ஆண்டவரின் பெலனோடு சேர்ந்து பெருக்கமாக இருக்கும்.
– சுவிசேஷகர் யோவான் காந்தி இரா,
நங்கூரம் ஊழியங்கள்
கைபேசி: +919840872799

